search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓபி ராவத்"

    இந்திய தேர்தல் கமிஷனின் 23-வது தலைமை ஆணையாளராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்று கொண்டார். #SuniArora #ChiefElectionCommissioner #CECofIndia #CEC
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் 22-வது தலைமை ஆணையாளராக கடந்த 23-1-2018 அன்று பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஜனாதிபதி மாளிகை அறிவித்திருந்தது.



    இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் தலைமையகத்தில் சுனில் அரோரா இந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் 23-வது தலைமை ஆணையாளராக இன்று பொறுப்பேற்று கொண்டார். #SuniArora #ChiefElectionCommissioner #CECofIndia #CEC
    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு அதிகம் உள்ளதால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார். #GajaCyclone #TamilNaduBypolls
    புதுடெல்லி:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

    தற்போது கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், குறித்த காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TamilNaduBypolls
    தேர்தல் விதிமீறல்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற ‘மொபைல் ஆப்’ -ஐ உருவாக்கி இருக்கிறது. இதை ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. #ElectionCommission #CVIGIL #MobileApp
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற ‘மொபைல் ஆப்’ -ஐ உருவாக்கி இருக்கிறது. இதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்திஸ்கர், ஆகிய இடங்களில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    கூகுள் பிளே ஸ்டோர் அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    வேட்பாளர்களோ, அரசியல் வாதிகளோ தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதை வாக்காளர்கள் கண்டறிந்தால் புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்து அந்த செயலியின் வழியாக தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கலாம்.

    கோப்புப்படம்

    தகவல் கொடுப்பவர் தனது பெயர் விபரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்க விரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.

    புகாரின் உண்மைத் தன்மையை பொறுத்து 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அந்த செயலி வழியாகவே தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #CVIGIL #MobileApp
    ×